×

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை; முதல்வர் தீர்வு காண வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர்  சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: 7வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே ஊதிய முரண்பாடுகளை களையவும், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்கின்ற கொள்கையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து, சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், உண்ணாவிரத போராட்டத்தின் தீவிரத்தையும் உணர்ந்து அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க பரிசீலித்து, நிரந்தர தீர்வு காண முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Tags : Saradkumar , Secondary teachers request; CM must find solution: Sarathkumar insists
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு...