சென்னை: ஜனவரி 2ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு நகர் பகுதியில் 300 கார்டுகளுக்கும், ஊரக பகுதியில் 200 கார்டுகளுக்கும் டோக்கன் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு டோக்கன் தருவதில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.