×

எதிராலியின் தலையை துண்டிக்க இந்துக்கள் தங்கள் வீடுகளில் கூர்மையான கத்தி வைத்துக்கொள்ள வேண்டும்: பாஜக எம்.பியான பெண் சாமியார் பிரக்யா சர்ச்சை பேச்சு..!!

கர்நாடகா: எதிராலியின் தலையை துண்டிக்க இந்துக்கள் தங்கள் வீடுகளில் கூர்மையான கத்தியை வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசிய பாரதிய ஜனதா பெண் எம்.பி பிரக்யா தாகூருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சர்ச்சைக்கு பேர் போன பாரதிய ஜனதா பெண் எம்.பி பிரக்யா தாகூர் கர்நாடக மாநிலம், சிவமோகாவில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இந்துக்கள் தங்கள் குழந்தைகளை கிறிஸ்துவ மிஷனரிகளின் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்றார். லவ் ஜிகாத் முறை நடைமுறையில் உள்ளதாக கூறிய பிரக்யா தாகூர், இந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கூர்மையான கத்தியை வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

குறைத்த பட்சம் காய்கறிகள் வெட்டும் கத்தியையாவது வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர், எதிராளி வீட்டுக்குள் நுழைந்தால் தலையை வெட்டவேண்டும் என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது. பிரக்யா தாகூரின் இந்த வெளிப்படையான வன்முறை பேச்சிக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைப் பேச்சுக்காக விமர்சிக்கபடும் பிரக்யா தாகூர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பலமாதங்கள் சிறையில் இருந்தவர். பாஜக எம்.பியான பிறகு மக்களவையில் கோட்சேவை புகழ்ந்து பேசி மன்னிப்பு கேட்ட இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.


Tags : Hindus ,BJP ,Pragya , Sivamoga, Hindus, Knife, Woman Preacher, Controversial Speech
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...