×

சுனாமி நினைவு தினம்: சமத்துவ மக்கள் கழகம் அஞ்சலி

சென்னை: சுனாமி தாக்குதலின் 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருவொற்றியூர் அருகே ராமகிருஷ்ணா நகர் கடற்கரை பகுதியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்று, உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, காஞ்சி மாவட்ட செயலாளர் ராம், திருவொற்றியூர் பகுதி செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் கிருஷ்ணசந்திரன், வட்ட செயலாளர் முருகேசன், பாலசந்தர், மகளிரணி நிர்வாகிகள் கல்பனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி உள்பட பல்வேறு நிர்வாகிகளும் பொதுமக்களும் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags : Tsunami Remembrance Day , Tsunami Remembrance Day: Equality People's Association Tributes
× RELATED கல்பாக்கத்தில் சுனாமி நினைவு தினம்...