கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் காதுக்கு ஆபரேஷன் செய்ததில் கண், வாய் மூட முடியவில்லை என்று புகார் மனு அளித்துள்ளார். ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஆட்சியர் அலுவலக குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்துள்ளார். கண், வாயை மூட முடியாமல் பிளாஸ்டர் ஒட்டி தூங்குவதாக கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.