×

பாம்பன் பாலத்தில் 28ம் தேதி வரை ரயில்கள் ரத்து

நெல்லை: பாம்பன் ரயில் பாலத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - ராமேஸ்வரம் இரு மார்க்கத்திலும் செல்லும் ரயில்கள் இன்றும், நாளையும் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் - திருச்சி, ராமேஸ்வரம் - மதுரை ரயில்களும் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வழியாக ராமேஸ்வரம் செல்லும் வாரம் மும்முறை ரயில் நாளை (27ம் தேதி) மண்டபம் வரை மட்டுமே செல்லும்.

மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் இன்றும், 28ம் தேதியும் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வரும். குமரி, ராமேஸ்வரம் என புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் இதை கவனித்து செயல்பட தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.

Tags : Pampan Bridge , Trains canceled on Pampan Bridge till 28th
× RELATED பாம்பன் பாலத்தில் கிடக்கும் சேதமான மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை