சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 140 பேர் மீதும், உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 33 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் அளித்துள்ளனர்.