×

பைக் மீது லாரி மோதி விபத்து: கணவன் கண் எதிரே மனைவி பரிதாப பலி

ஸ்ரீபெரும்புதூர்: படப்பையில் பைக் மீது லாரி மோதியதில் கணவன் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (36). இவர், அதே பகுதியில் இளநீர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரோலினா (30).  இருவருக்கும் திருமணமாகி 2 மாதம் ஆகிறது. இந்நிலையில், நேற்று இருவரும் பைக்கில் வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, படப்பை பகுதியை வந்தடைந்தபோது பின்னால் வந்த கனகர லாரி பைக் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, பரோலினா மட்டும் லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில், ஜெகநாதன் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். விபத்து குறித்து கிடைத்த தகவலின்பேரில், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரோலினா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கனரக லாரி குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Lorry , Truck collides with a bike accident: Wife dies in front of husband's eyes
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது