×

கன்றுக்குட்டியை பிரித்ததால் பின்தொடர்ந்த பசு: காஞ்சியில் நெகிழ்ச்சி சம்பவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வானவில் நகரைச் சேர்ந்தவர் கலை. இவர், வீட்டில் பசுக்களை பராமரித்து பால் வியாபாரம் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான பசு ஒன்று கன்றுக்குட்டி ஈன்ற நிலையில், பிறந்த கன்று குட்டியை உரிமையாளர் கலை தனது டூவீலரில் நண்பருடன் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளார். இதனை பார்த்த பசு, ஈன்ற கன்று குட்டியை தன்னிடமிருந்து பிரித்து எடுத்து செல்வதாக நினைத்து பாச மிகுதியால் கன்று குட்டியை எடுத்துக்கொண்டு சென்ற இருசக்கர வாகனத்தை விடாது பின் தொடர்ந்து சென்றது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் போக்குவரத்து அதிகம் உள்ள வந்தவாசி கன்றுக்குட்டியை அழைத்து சென்ற டூவீலரை விடாது பசு பின்தொடர்ந்து சென்ற சம்பவம், அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த வீடியோ காட்சி காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Tags : Leshi ,Kanchi , A cow followed by a split calf: Leshi incident in Kanchi
× RELATED கருடன் கருணை