×

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: தாம்பரம் மேயர் வழங்கினார்

தாம்பரம்: தாம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடி, 300க்கும் மேற்பட்ட ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், திமுக தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன் கூறுகையில், வரும் ஆண்டு தாம்பரம் சண்முகம் சாலையில் பிரமாண்ட மேடை அமைத்து ஏராளமான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட வேண்டும். அதன்மூலம் இது மதசார்பற்ற நாடு, திராவிட நாடு என்பதை நாம் அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம், மனித நேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகீர் உசேன், சலிம்கான், மதிமுக மாவட்ட செயலாளர் மகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் பிரின்ஸ் தேவசகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Christmas ,Mayor ,Tambaram , Welfare assistance to the poor and needy on the occasion of Christmas: Mayor of Tambaram provided
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!