×

தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: 2022-23ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள த  அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் இதுவரை வழங்கப்பட்டு வந்த இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ஆகிய  நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களால் வழங்கப்பட்டு வரும்  உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி  வழங்கி  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



Tags : Tamil Nadu Putrai Vannar Welfare Board ,Tamil Nadu Govt , Increase in stipend for members of Tamil Nadu Putrai Vannar Welfare Board: Tamil Nadu Govt
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...