×

தீப்பிடித்து எரியும் கொலம்பியா எண்ணெய் கிணறு: தீயை கட்டுப்படுத்த 3 மாகாண வீரர்கள் தீவிரம்..!!

கொலம்பியா: கொலம்பியாவில் எண்ணெய் சேமிப்புக்கிடங்கில் பற்றிய தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பேரன்குல்லா என்ற இடத்தில் துறைமுகத்திற்கு அருகே எண்ணெய் சேமிப்புக்கிடங்குகள் அமைந்துள்ளன. இங்கு உள்ள ஒரு எண்ணெய் கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. எரிப்பொருள் கிடங்கு என்பதால் தீ கட்டுக்கடங்காமல் பரவியது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். அப்போது எரியும் எண்ணெய் கிணற்றில் தவறிவிழுந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். பற்றி எறியும் தீயை அணைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்றுவருகிறது.

பேரன்குல்லா எல்லையிலுள்ள மூன்று மாகாணங்களில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு தீயணைப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்க மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளதால். தீ கட்டுக்குள் கொண்டுவரும் வரை பேரன்குல்லா துறைமுகப்பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


Tags : Columbia , Fire, oil well, soldiers intense
× RELATED மேடம் வெப் – திரைவிமர்சனம்