திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 366 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.5.30 கோடி காணிக்கையாக கிடைத்தது. தொடர்ந்து நேற்று வைகுண்ட காத்திருப்பு அறைகளில் உள்ள 12 அறைகள் பக்தர்களால் நிரம்பியது. இதனால், 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசித்தனர்.