தேனி: கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தில் வாழை தோட்டத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. குலை தள்ளும் பருவத்தில் இருந்த சுமார் 200 வாழை மரங்கள் சேதமாகியுள்ளன. யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.