ருமேனியா: ருமேனியா இருண்ட வசீகரம் மற்றும் மாய அழகு ஆகியவற்றால் சூழப்பட்ட ஒரு நாடு, இணையற்ற முறையில் புத்தாண்டைக் கொண்டாடுகிறது. பல ரோமானியர்கள் விவசாயிகள் தங்கள் விலங்குகள் பேசுவதைக் கேட்க முயற்சிக்கும் பாரம்பரியத்தை வழங்குகிறார்கள். புத்தாண்டை வரவேற்கும் விதமாக ருமேனியாவில் நடனக்கலைஞர்கள் மாறுவேடமிட்டு வலம் வந்தது ருமேனியா பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ருமேனியாவில் புத்தாண்டுக்கான மூடநம்பிக்கைகள் அந்த நாளில், விலங்குகள் பேசும் திறனைப் பெறுகின்றன என்று மக்கள் நம்புகிறார்கள்.
வருடத்தின் இறுதிநாட்களை கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் ருமேனியாவில் பாரம்பரிய நடனத்திருவிழா நடத்தப்படும். இந்நடனப் பாங்குகளின் செழுமையை வெளிப்படுத்தும் சிறந்த நடனக் கலைஞர்களின் நடனநிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெறுகின்றன. இந்த முறை விழாவை சிறப்பாக கொண்டாட எண்ணிய நடனக்கலைஞர்கள் கரடி, குதிரை வேடமணிந்து தலைநகர் புகாரஸ்ட் வீதிகளில் நடனமாடி மகிழ்ந்தனர். வியக்கவைக்கும் மாறுவேடம், இடை நிற்காத மேளச்சத்தம், வசீகரிக்கும் நடன அசைவுகளால் மக்கள் சிலாகிக்க புகாரஸ்ட் நகரம் விழாக்கோலம் பூண்டது.