×

பொன்பாடி சோதனைசாவடியில் கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது

திருத்தணி: திருத்தணி அருகே பொன்பாடி சோதனை சாவடியில் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறுவன் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் திருத்தணி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரை சந்தேகத்தின்படி போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது பதற்றத்துடன் பேசினர். இதையடுத்து அவர்களிடம் சோதனை நடத்தியபோது கஞ்சா பொட்டலம் வைத்திருந்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பிடிபட்ட நபர்கள் சென்னை பெரம்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (26), திருத்தணி அடுத்த தாழவேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்த மனோகரன் (22) மற்றும் ஒரு சிறுவன்,  திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகுமார், அரக்கோணம் நாகாலம்மன் நகரை சேர்ந்த பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். இதன்பிறகு அவர்களை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Ganja ,Ponpadi , Ganja seized at Ponpadi check post; 5 people arrested
× RELATED பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா: இளைஞர் கைது