×

ஓசூர் அருகே மாதேப்பட்டியில் 3 யானைகள் தஞ்சம்: கிராம மக்கள் பீதி

ஓசூர்: சூளகிரி மேலுமலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 3 யானைகள், ஓசூர் அருகே கிராமத்தையொட்டி முகாமிட்டிருப்பதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மேலுமலை வனப்பகுதியில், கடந்த ஒரு மாதமாக 3 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு, இந்த யானைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து, எண்ணேகொல்புதூர் வழியாக ேநற்று காலை, மாதேப்பட்டி கிராமத்திற்கு அருகே வந்து யானைகள் முகாமிட்டுள்ளன.

இதனால், எண்ணேகொல்புதூர் மற்றும் போட்ரப்பள்ளி, ஒட்டுக்கொல்லை உள்பட 5 கிராம மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர். இதையடுத்து, யானைகள் தொடர்ந்து இடம்பெயர்வதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், வனத்தையொட்டியுள்ள பகுதிகளுக்கு ஆடு-மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். யானைகள் அங்கிருந்து விரட்டப்படும் வரை, வனப்பகுதியையொட்டியுள்ள விளைநிலங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என தண்டோரா போட்டு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.


Tags : Mathepatti ,Hosur , Hosur, 3 elephants in Mathepatti, villagers panic
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்