டெல்லி: டெல்லி விமான நிலைய கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக 1,000 சிஆர்பிஎப் வீரர்களை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் அதிகரிப்பால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சோதனையில் ஏற்படும் கால தாமதத்தால் விமானத்தை தவறவிடுவதாக பயணிகள் புகார் தெரிவித்த நிலையில் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.