×

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்..!!

சிட்டகாங்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 150 ரன்னில் சுருண்டது. வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகளில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 150 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் 55.5 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசத்தை விட 254 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5, சிராஜ் 3, உமேஷ் யாதவ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 254 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது.


Tags : Bangladesh ,Indian , Indian team, first test match, first innings, Bangladesh team all out
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...