×

செம்மஞ்சேரியில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி 3 பேர் படுகாயம்; போலீசார் விசாரணை

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரியில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நங்கநல்லூர், பி.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (30). இவர் நேற்று அதிகாலை பைக்கில் செம்மஞ்சேரிக்கு புறப்பட்டார்.  செம்மஞ்சேரி குமரன் நகர் சிக்னலை அவர் கடக்க முயன்றபோது, கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. மேலும், சாலையோரம் சைக்கிளில் டீ விற்றவர் மற்றும் அங்கு   டீ குடித்துக் கொண்டிருந்தவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. தகவலறிந்த பள்ளிக்கரணை   போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மூவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், காரை ஓட்டி வந்தவர் பார்த்தசாரதி என்பதும்,  படுகாயமடைந்த மற்ற இருவர் பெரும்பாக்கம் சுனாமி நகரை சேர்ந்த டீ வியாபாரி முருகன் (50) மற்றும் செம்மஞ்சேரி சுனாமி நகரை சேர்ந்த மாரிசாமி (46) என்பதும், ஜெகன், முருகனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Semmancheri , 3 injured in Semmancheri luxury car collision; Police investigation
× RELATED செம்மஞ்சேரியில் ரூ.78 கோடி மதிப்பில்...