×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்

பெதுல்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், உயிரிழந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மய், அப்பகுதியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 40 அடி ஆழத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்ததால், அவனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வந்து மீட்புப் பணியில் இறங்கினர். ஆனால், உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து மாநில ஊர்க்காவல் படை கமாண்டன்ட் எஸ்.ஆர்.சாமி கூறுகையில், ‘இன்று அதிகாலை 5 மணியளவில் சிறுவன் தன்மய் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்திலேயே, சிறுவன் இறந்துவிட்டான்’ என்று கூறினார்.


Tags : borewell , Boy dies after falling into borewell: Tragedy in Madhya Pradesh
× RELATED தாம்பரத்தில் ரூ.80.70 லட்சம் மதிப்பில்...