×

ஆற்காட்டில் வீடு புகுந்து பயங்கரம்; தாய், மகளை பலாத்காரம் செய்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன்: வெளியே காவலுக்கு இருந்த கொடூரி

ஆற்காடு: ஆற்காட்டில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கஞ்சா வியாபாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பகுடு என்கிற பாஸ்கர் (33), கஞ்சா வியாபாரி. இவரது மனைவி துர்கா (28). அதேபகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது 17 வயது மகளுடன் வசிக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து ஆற்காட்டில் குடியேறினார். அந்த பெண், ஆற்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

இந்நிலையில் அந்த பெண்ணிடம் பாஸ்கர் அவ்வப்போது வலியச்சென்று பேச்சுக்கொடுப்பாராம். ஆனால் அந்தப்பெண், அவரை கண்டுகொள்ளாமல் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாஸ்கரின் மனைவி துர்காவுக்கும், அந்த பெண்ணுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கு தொடர்பாக பாஸ்கர் குண்டாசில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த வாரம் தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் பாஸ்கர், அந்த பெண்ணை அடைய வேண்டும் என திட்டம்போட்டாராம். அதன்படி கடந்த மாதம் 28ம்தேதி நள்ளிரவு தனது மனைவியுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி பாஸ்கர் நுழைந்துள்ளார். துர்கா, கதவை வெளிப்புறம் பூட்டிக்கொண்டு காவலுக்கு நின்றாராம்.

அப்போது உள்ளே சென்ற பாஸ்கர், அந்த பெண்ணை அங்குள்ள பாத்ரூமில் தள்ளி கதவை வெளிப்பகுதியில் தாழிட்டுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பிளஸ் 2 மாணவியை, பாஸ்கர் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை நிர்வாணமாக நிற்க வைத்து தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தாராம். அதன்பின்னர் பாத்ரூமில் இருந்த அந்த மாணவியின் தாயையும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரையும் நிர்வாணமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

பின்னர் தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உங்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினாராம். அதன்பின்னர் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி வீடு திரும்பியுள்ளனர். இதேபோல் அடிக்கடி பாஸ்கர் அந்த பெண்ணை வீடியோ காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலாத்காரம் செய்த பாஸ்கர், உடந்தையாக இருந்த அவரது மனைவி துர்கா ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பலாத்கார வீடியோ தொடர்பாகவும் அவர்களது செல்போனை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இந்த சம்பவம் ஆற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பிளஸ் 2 மாணவியை, பாஸ்கர் கத்தியை  காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை நிர்வாணமாக நிற்க  வைத்து தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தாராம்.  அதன்பின்னர் பாத்ரூமில் இருந்த அந்த மாணவியின் தாயையும் கத்தியை காட்டி  மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Tags : Arhat , Arhat home invasion terror; The brutal man who raped mother and daughter and threatened her with nude video: The brutal man was in custody outside
× RELATED ஆற்காடு வீராசாமி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து