சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே சொகுசு காரில் திடீரென தீ பற்றியது. ஓட்டுனர் காரில் இருந்து தப்பிய நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.