×

தொடர் மழை எதிரொலி!: தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 3,775 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 3,775 பாசனக் குளங்கள் முழுகொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் அதிக மழையைப் பெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக நல்ல மழையை எதிர்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாகவே விடாமல் மழை பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 3,775 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பின. அதன் விவரம் பின்வருமாறு;

* தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்வதால் கடந்த 24 மணி நேரத்தில் 148 குளங்கள் நிரம்பின.

* தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 குளங்களில் 889 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன.

* தஞ்சை மாவட்டத்தில் 326 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

* சிவகங்கை 280, திருவண்ணாமலை 283, புதுக்கோட்டை 172, ராணிப்பேட்டை 158, திருச்சி 52 பாசனக் குளங்கள் நிரம்பின.

* திண்டுக்கல் 100, ராமநாதபுரம் 20, கிருஷ்ணகிரி 76, கள்ளக்குறிச்சி 101, சேலம் 61 பாசனக் குளங்கள் நிரம்பின.

* திருவள்ளூர் 179, செங்கல்பட்டு 212, விழுப்புரம் 111, தென்காசி 179, விருதுநகர் 69, நெல்லை 57, கோவையில் 12 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

Tags : Tamil Nadu , Incessant rain echoes!: 3,775 irrigation ponds maintained by the Water Resources Department in Tamil Nadu have reached their full capacity and are 100% full..!!
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...