சென்னை: விருதுநகரில் 1,500 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தமிழ்நாட்டுக்கு முதன்மையான பங்களிப்பை அளித்து வருகிறது. அரசின் முனைப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன என்று முதலமைச்சர் கூறினார்.