மதுரை: மஞ்சள் எவ்வளவு நல்லதோ அதேபோல் மஞ்சள் பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். மஞ்சள் மலிந்திருக்க மரணம் தணிந்திருக்கும் என்ற பழமொழியை கூறி நீதிபதி கருத்து தெரிவித்தார். தமிழக அரசின் மஞ்சள் பை திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் நீதிபதி கேட்டுக் கொண்டார். மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரங்களை ஐகோர்ட் கிளை நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார்.