சென்னை: மாற்றுத்திறனாளிகள் துறையை தனி கவனிப்பில் வைத்திருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், அரசின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான தொகுப்பு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி என்பது அனைவருக்கும் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.