சென்னை: தேசிய, சர்வதேச விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். 190 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நடக்கும் விழாவில் முதல்வர் விருதுகளை வழங்கி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.