திருச்சி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மணப்பாறை போலீசில் அரசு வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி ராஜேந்திர பாலாஜி அவதூறாக பேசிய ஆடியோவை டிவிட்டரில் வெளியிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி பேசிய ஆடியோவை டிவிட்டரில் பதிவிட்டவர் மற்றும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.