சென்னை: தமிழ் அன்னையும் தேம்பி அழும் இழப்பு என அவ்வை நடராசன் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், தமிழாய்ந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் நம்மைவிட்டு பிரிந்தார் எனும் துயர்மிகு செய்தியால் வாடி நிற்கிறோம். காவல்துறை மரியாதையுடன் அவரது நிகழ்வுகள் நடைபெறும். தமிழுள்ள வரை அவரது புகழ் நம்மிடையே நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.