×

ரயில்களில் ஏசி-3 அடுக்கு பெட்டி விரைவில் நீக்கம்: ரயில்வே திடீர் முடிவு

புதுடெல்லி: ஏசி 3 அடுக்கு பொருளாதார வகுப்பு (3- இ)பெட்டிகளை நீக்க, ரயில்வே முடிவெடுத்துள்ளது. ரயில்வேயில் 3 அடுக்கு ஏசி வகுப்புகள் தான் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகளாக உள்ளது. இந்த பயண வகுப்புகள் மிக பிரபலமானது. பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதி அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏசி பொருளாதார பெட்டிகள்(3- இ) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ரயில் கட்டணங்கள் 6 முதல் 8 சதவீதம் வரையில் குறைவாக வசூலிக்கப்பட்டது.

 ஏசி 3 அடுக்கு பெட்டியில் 72 பேர் பயணம் செய்யலாம். ஆனால், ஏசி 3 இ பெட்டியில் 83 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கு முன்பதிவு செய்யும்போது ஏசி 3 பொருளாதார வகுப்பு என்ற பிரிவு என குறிப்பிட வேண்டும். ஆனால் தற்போது ரயில்களில் 3-இ என்ற வசதி இல்லை. ஏசி 3- இ பெட்டிகளை ரத்து செய்ய ரயில்வே முடிவு எடுத்துள்ளது என தெரிகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது,‘‘ அடுத்த சில மாதங்களுக்கு ரயில்களில் ஏசி 3- இ வகுப்பு இருக்காது.

3-இ பொருளாதார வகுப்பு ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் இணைக்கப்படும். இந்த பணி 4 மாதங்களில் முடிக்கப்படும். தற்போது 463 ரயில்களில் ஏசி 3- இ பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 11,277 ரயில்களில் ஏசி 3ம் வகுப்பு பெட்டிகள் உள்ளன ’’ என்று தெரிவித்தனர்.

Tags : AC-3 tiered coach in trains, soon to be removed, Railways sudden end
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...