×

பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சீர்காழி: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சீர்காழியில் நேற்று அளித்த பேட்டி: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மீண்டும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மேலும் பாதிப்பு ஏற்படும். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியதன்பேரில் பயிர் காப்பீட்டு தேதி 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு போதாது. வரும் 30ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீடிக்க வேண்டும் என்றார்.

Tags : Mutharasan , Extension of crop insurance date: Mutharasan insists
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...