டெல்லி: 17வது ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேசியாவின் பாலி நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார். ஜி20 மாநாட்டில் சுற்றுசூழல், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார். மாநாட்டில் பொருளாதாரம், எரிசக்தி, விவசாயம் உள்ளிட்டவை குறித்து உலகத்தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.