சீர்காழி: சீர்காழி, மயிலாடுதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணி நடைபெறுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கையால் மக்கள் திருப்தியாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் கூறுவது பற்றி கவலையில்லை. அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மக்கள் தெரிவித்த குறைகள் உடனடியாக சரி செய்யப்படும் எனவும் கூறினார்.