×

தாம்பரம், பல்லாவரம் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி காட்சி மூலம், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், தாம்பரம் சட்டமன்ற தொகுதி சார்பில் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் கேம்ப் ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையிலும், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி சார்பில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில், ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களுடன் (பிஎல்ஏ-2) சட்டமன்ற தொகுதி வாரியாக காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, நியமன குழு உறுப்பினர் பெருங்குளத்தூர் சேகர், மதுரபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன், செம்பாக்கம் சுரேஷ், பீர்க்கன்காரணை சங்கர், ஜோதி குமார், சிட்லபாக்கம் சுரேஷ், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா தயாளன், திருநீர்மலை ஜெயக்குமார், பெர்னட், கருணாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Tambaram ,Pallavaram , Chief Minister's discussion with polling agents of Tambaram, Pallavaram constituency
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...