×

தாய்மொழியான தமிழ் மொழியை மெருகேற்ற வேண்டும் என அமித்ஷா அறிவுறுத்தினார்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக மக்களின் அன்புக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, தமிழக மக்களுக்கு பாஜக மீது அன்பு பெருகி வருகிறது. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது நெகிழ்ச்சியான தருணம். தமிழக மக்களின் மீது பிரதமர் மோடி எல்லையற்ற பாசம் வைத்துள்ளனர். கொட்டும் மழையில் பெண்கள் கைக்குழந்தையுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. காசி சங்கமம் குறித்து திண்டுக்கல்லில் பிரதமர் தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாரணாசிக்கு தமிழர்கள் 19ம் தேதி வரும்போது வரவேற்க நான் கட்டாயம் இருப்பேன் என பிரதமர் கூறியுள்ளார் என தெரிவித்தார். தொடர்ந்து, அமித்ஷாவுடன் ஆலோசித்தது என்ன? என்பது குறித்து அண்ணாமலை செய்தியர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை எங்களுக்கு ஊக்கமாக இருந்தது. தலைவர்களை அமித்ஷா உற்சாகமூட்டிவிட்டு சென்றிருக்கிறார். பாஜக வளர்ச்சி, தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் ஆலோசனை நடைபெற்றது.

தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசவில்லை. மருத்துவப் படிப்பை தாய்மொழியில் படிக்கச் வேண்டும் என அமித்ஷா கூறினார். தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை படிக்க 1350 இடங்கள் உள்ளன. ஆனால் பொறியியலில் வெறும் 50 மாணவர்கள் தான் தாய்மொழியில் படிக்கின்றனர். தாய்மொழியான தமிழ் மொழியை மெருகேற்ற வேண்டும் என அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார். நேற்று டுவிட்டரில் வணக்கம் மோடி என்ற ஹாஷ்டேக் அதிகளவில் பகிரப்பட்டது. 14 லட்சம் பேர் பிரதமரை வரவேற்று டுவிட்டரில் பகிர்ந்தனர். கட்சியில் யாரையும் இன்று இணைக்கவில்லை என கூறினார்.


Tags : Amitsha ,Anamalai , Mother tongue, Tamil language, Amitsha, Annamalai interview
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...