×

மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து: முதல்வர் அறிவிப்புக்கு அன்புமணி வரவேற்பு

சென்னை: மனிதவள சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்தல், குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது ஆகியவை குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான மனிதவள சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக அரசின் மனிதவளத்துறை இது குறித்து வெளியிட்ட அரசாணை எண் 115 சமூகநீதிக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் உள்ள நியாயங்களை உணர்ந்தும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும் முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் ஆய்வு வரம்புகளை மாற்றுவது மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வாகி விடாது. நிரந்தர பணி நியமனங்களே தொடரும்; தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்கள் அனுமதிக்கப்படாது என்று அரசு கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : HRC ,Anbumani ,Chief Minister , Abolition of examination limits of HRC: Anbumani welcomes Chief Minister's announcement
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...