×

மாலத்தீவு தலைநகர் மாலே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு..!!

மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு வாகன நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து, வீடுகளுக்கு பரவியதில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் விவரங்களை இந்திய வெளியுறவுத்துறை திரட்டி வருகிறது.

Tags : Malé ,Maldives ,Indians , Maldives, apartment building, fire accident, Indians killed
× RELATED இந்தியக்கொடியை அவமதித்த மாலத்தீவு...