×

திருத்துறைப்பூண்டி அருகே நேமம் வடிகால் வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை-அகற்ற விவசாயிகள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே நேமம் வடிகால் வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரையை அக்கற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நேமம், இளநகர் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பணி, தாளடி நடவு பணியும் நடைபெற்று உள்ளது. இந்த கிராமக்களுக்கு நேமம் வடிகால்வாய்கால் உள்ளது. மழைகாலங்களில் தண்ணீர் வடியாமல் இருந்து வருகிறது.

தற்போது வாய்க்கால் முழுவதும் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடக்கிறது, இதனால் வயல்களில் மழை தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் பயிர்கள் அழுகிவிடும் நிலை உள்ளது. இதுகுறித்து நேமம் கிராம கமிட்டி தலைவர் ஆசைத்தம்பி கூறிகையில் நேமம் வடிகால் வாய்கால் தூர்வாரி மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. தற்போது வாய்க்கால் முழுவதும் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடிகளால் விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெங்காயதாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Nemam ,Tiruthurapoondi , Thiruthurapoondi: Farmers want to cut the air lotus lying in the Nemam drain near Thiruthurapoondi.
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...