கொழும்பு: கப்பல் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த இலங்கைத் தமிழர்களை சிங்கப்பூர் கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 300க்கும் அதிகமான இலங்கை அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டு வியாட்நாம் அழைத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள், அகதிகளாக வேறுநாடுகளுக்கு செல்லும் சூழல் நீடிக்கிறது.