×

துறையூர் அருகே மாநில ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்டம்: பல மாவட்டங்களில் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடைபெற்ற 5-ம் ஆண்டு மாநில ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்டத்தில் 18 அணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பபோட்டியில் திருச்சி, கோவை, தேனி, செங்கல்பட்டு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வயது பிரிவு வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 19 வயத்திற்குட்பட்டவருக்கான பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்தது.
இப்போட்டியில் கோவை மாவட்ட அணி 2-ம் இடத்தையும், திருச்சி மாவட்ட அணி 3-ம் இடத்தையும் பிடித்தன. இப்போட்டி மூலம் தேசியளவில் நடைபெறும் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் இனம் காணப்பட்டுள்ளதாக மாநில சங்க தலைவர் சாய் சுரேஷ் தெரிவித்துள்ளார்.  


Tags : Satharyur , track, roller, skating, basketball, player, player, participation
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு