கெங்கவல்லி: சேலம் மாவட்டம், வீரகனூர் ஏரியில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் புகுந்து மதகை உடைத்து இரும்பு ராடுகளை திருடிச்சென்றுள்ளனர். இரும்பு ராடுகளை திருடிச் சென்று விட்டதால், ஏரிக்கு நீர் வரும் போது, அவை ஏரி வாய்க்கால் வழியாக சென்று விவசாய நிலங்களில் பாய்கிறது. இதனால் பயிர்கள் அழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரி நீர் வீணாக ஆற்றில் சென்று கலக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகவே, போலீசார் ஏரிக்கரை மதகிலிருந்து இரும்பு ராடுகளை திருடி சென்ற திருடர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் உடனடியாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து புதிதாகமதகு அமைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.