×

விழுப்புரத்தில் எம்எல்எஸ் குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை..!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் எம்எல்எஸ் குழுமத்துக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தி வருகின்றனர்.  தீபாவளி பண்டிகை காலங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். கிரீன்ஸ் வணிக வளாகம், ஜவுளி கடை, எம்எல்எஸ் மளிகை கடையில் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. விழுப்புரத்தில் மற்றொரு பிரபல ஜவுளி கடையான கன்னிகா பரமேஸ்வரி ஜவுளிக்கடை உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நீடிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள எம்எல்எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான சிவா டெக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். எம்எல்எஸ் குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சோதனையை தொடர்வதால் வரி ஏய்ப்பு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags : MLS ,Vilupupuram , Villupuram, MLS Group, Income Tax Department
× RELATED அரசியலில் யாருக்கும் ரஜினிகாந்த்...