×

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன், கள்ளக்காதலி உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு: திருடிய நகைகளை அடகு வைத்து நட்சத்திர ஓட்டல்களில் உல்லாசம்

சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன், அவரது கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு, ஜிஜி நகர், பஞ்சயாத்து சாலையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (45). தனியார் மருந்து நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தனது மனைவி வைஜெயந்தியுடன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பூஜை பொருட்கள் வாங்க காரில் வந்தார். பிறகு காரை வடபழனி மேம்பாலம் அடியில் நிறுத்திவிட்டு வடபழனி முருகன் கோயில் அருகில் உள்ள கடையில் வீட்டிற்கு தேவையான பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு காரில் ஏறுவதற்காக நடந்து சென்றனர்.

அப்போது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், நேரம் கேட்பது போல் நடித்து, வைஜெயந்தி கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், மண்ணிவாக்கம் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல வழிப்பறி கொள்ளையன் நடராஜா (எ) பேபி ராஜா (28) தனது கூட்டாளியான எழும்பூர் ரயில்வே குடியிருப்பை சேர்ந்த டேஜா (26) என்பவருடன் இணைந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

குற்றவாளிகள் அடையாளம் கண்டும், அவர்களை கைது செய்ய முடியவில்லை. இதனால் வழிப்பறி கொள்ளையர்கள் குறித்து புகைப்படத்துடன் அனைத்து போலீசாருக்கும் பழைய குற்றவாளிகள் அடையானம் காட்டும் ஆப் மூலம் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், பிரபல கொள்ளையன் நடராஜா நேற்று முன்தினம் தனது கள்ளக்காதலியான தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு சி.பிளாக்கில் கணவனை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வரும் நிஷாந்தி (29) என்பவரை பார்க்க வந்துள்ளார்.

இந்த தகவல் தேனாம்பேட்டை காவல்நிலைய தலைமை காவலர் பொன்வேல் என்பவருக்கு தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்று நிஷாந்தினியுடன் உல்லாசமாக இருந்த நடராஜா அதிரடியாக கைது செய்தார். பின்னர் நடராஜாவிடம் நடத்திய விசாரணையில், மருத்துவ விஞ்ஞானி பாலசுப்பிரமணியன் மனைவியிடம் பறித்த தாலி செயினை தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி எல்டாம்ஸ் சாலயில் உள்ள அடகு கடை ஒன்றில் ரூ.1.20 லட்சத்திற்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தை தனது கள்ளக்காதலியுடன் நடராஜா பல இடங்களுக்கு சென்று நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து பிரபல கொள்ளையன் நடராஜா மற்றும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி நிஷாந்தி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட நண்பர் டேஜா ஆகியோரை கைது செய்து தேனாம்பேட்டை போலீசார் வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், நடராஜா மற்றும் டேஜா ஆகியோர் வழிப்பற்றி செய்யும் நகைகளை நிஷாந்தி மூலம் அடகு வைத்தும், பிரபல கடைக்கடைகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. கள்ளக்காதலி நிஷாந்தி மீது குரோம்பேட்டை, தேனாம்பேட்டை, பாண்டிபஜார் காவல்நிலையங்களில் 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Chennai ,Kallakadali , Famous robber involved in serial chain robbery in Chennai, Kallagadali, 3 others jailed: Pledge stolen jewelery and frolic in star hotels
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...