×

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமி, தண்டையார்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி பள்ளிக்குச் சென்ற இவர், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கொருக்குப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அயனாவரம் மதுரா தெருவை சேர்ந்த அபினேஷ் (19) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை அபினேஷ் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொருக்குப்பேட்டை போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.  மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் அபினாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Instagram ,Pocso , Kidnapped girl after falling in love through Instagram arrested in Pocso
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்