சென்னை: தமிழில் 16 வருடங்கள் கழித்து ‘சர்தார்’ படத்தின் மூலமாக மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், லைலா. இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமணம் நடந்தவுடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். நல்ல மனைவி, நல்ல மருமகள், நல்ல தாய் உள்பட பல பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருந்தது. கணவர் பிசினஸ் விஷயமாக பிசியானதால், குடும்பப் பொறுப்புகளை கவனிக்க ஆரம்பித்தேன். இப்போது எனது மகன்கள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்ளும் வயதை அடைந்துள்ளனர். இதனால்,மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன். எனது ரீ-என்ட்ரிக்காக கதைகள் கேட்டேன். எதுவுமே செட்டாகவில்லை.
இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக, அக்காவாக, அண்ணியாக நடிப்பது போன்ற கேரக்டர்கள் வந்தது. அப்படி நான் நடிக்கலாம் என்றாலும், ரீ-என்ட்ரியாகும் படத்தில் கேரக்டர் புதிதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.
அப்போது கார்த்தியின் ‘சர்தார்’ பட வாய்ப்பு வந்தது. மகனுக்காக சமூக விரோத கும்பலை எதிர்த்துப் போராடுபவர் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். திரைத்துறை இன்று நிறைய மாறிவிட்டது. மரத்ைதச் சுற்றி டூயட் பாடுகின்ற காலம் மறைந்துவிட்டது. இப்போது படத்துக்கு நல்ல கதைதான் ஹீரோ. மக்களும், ரசிகர்களும் மிக வித்தியாசமான கதைகளைப் ெபரிதும் வரவேற்று ரசிக்கின்றனர். அதற்கேற்பவே இன்றைய இளைஞர்களும் புதிய கதைக்களத்தில், மிக வித்தியாசமான கோணங்களில் கதை சொல்கின்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக காத்திருக் கிறேன்.