×

செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்!: பணத்திற்காக அத்தை மகனை காரில் கடத்தி கொலை செய்த இளைஞர்.. தஞ்சாவூரில் பரபரப்பு..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பணத்திற்காக அத்தை மகனை காரில் கடத்தி இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் புலவர்நத்தத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜ்மோகன். இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி எதிரில் வசித்து வந்ததுடன் அங்குள்ள வணிக வளாகம் ஒன்றையும் நிர்வகித்து வந்தார். ராஜ்மோகனின் மாமன் மகன் அம்மாபேட்டை அருகே ஹரித்துவார் மங்களத்தை சேர்ந்த  செல்வகுமார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

கூலிப்படையை சேர்ந்த செல்வகுமார், குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்த செல்வகுமார், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் ராஜ்மோகனிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். பணம் தராமல் மறுத்த ஆத்திரத்தில் ராஜ்மோகனை செல்வகுமார் நண்பர்களுடன் பின் தொடர்ந்து தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. நல்லூர் அருகே ராஜ்மோகன் ரத்தக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

ராஜ்மோகன் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி நண்பர் இஸ்மாயில் என்பவரின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது செல்வகுமார் மற்றும் அவர்களது நண்பர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பி தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பணத்திற்காக அத்தை மகனை கடத்தி கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Thanjavur , Money, cousin, murder, youth
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...