சென்னை: அவையின் மாண்பை கெடுக்காதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தான் அளித்த கடிதங்கள் நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றக்கோரி பழனிசாமி கடிதம் கொடுத்திருந்தார். சட்டப்பேரவை விதிகளை மீற வேண்டாம் எனவும் சபாநாயகர் எச்சரித்துள்ளார்.