சென்னை: சென்னை, முகாம் அலுவலகத்தில் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, சிவ நாடார் அறக்கட்டளையின் தலைவர் ஷிகர் மல்ஹோத்ரா சந்தித்து ஆலோசனை நடத்தினர்.