மதுரை: முத்துராமலிங்க தேவர் கவசம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கியில் முறையிட்டுள்ளனர். பன்னீர்செல்வம் சார்பாக மாநிலங்களவை எம்.பி. தர்மர், மதுரை மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வங்கிக்கு சென்றனர். பழனிசாமி தரப்பில் நேற்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் பசும்பொன் சென்று ஆதரவு கேட்டனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை தங்க கவசத்தை பெறுவதில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே போட்டி நிலவுகிறது.